புகையிலை பொருட்கள் பறிமுதல்
பொள்ளாச்சி ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங்கின் தனிப்படை எஸ்.ஐ., கவுதம் மற்றும் போலீசார், பழைய பஸ் ஸ்டாண்டில் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். கோவை சிங்காநல்லுாரைச்சேர்ந்த பாலமுருகன், 34 என்றும், பெங்களூருவில் இருந்து பொள்ளாச்சி பகுதியில் விற்பனைக்காக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், ஐந்து கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
விபத்தில் தொழிலாளி பலி
மசினகுடியைச் சேர்ந்தவர் கிருபாகரன், 40, கூலித்தொழிலாளி. இவர் நெகமம் அருகே உள்ள சின்னேரிபாளையம் பகுதியில் ரோட்டோரம் நடந்து சென்றார்.
அப்போது அந்த ரோட்டில் வந்த சரக்கு வாகனம், கிருபாகரன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த கிருபாகரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிவு விசாரிக்கின்றனர்.