sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறை கைதியிடம் கஞ்சா  போலீசார் விசாரணை 

/

சிறை கைதியிடம் கஞ்சா  போலீசார் விசாரணை 

சிறை கைதியிடம் கஞ்சா  போலீசார் விசாரணை 

சிறை கைதியிடம் கஞ்சா  போலீசார் விசாரணை 


ADDED : ஜன 16, 2025 03:37 AM

Google News

ADDED : ஜன 16, 2025 03:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மத்திய சிறையில் கஞ்சா வைத்திருந்த சிறை கைதியிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என, 3000க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளில் சிலர் கஞ்சா பயன்படுத்துவதாக, சிறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். அப்போது, 28வது பிளாக்கில் உள்ள, 14வது அறை கழிப்பறை தொட்டி அருகில், நின்று கொண்டிருந்த பிரகாஷ், 33 என்ற கைதியிடம் போலீசார் சோதனை செய்தனர். அவர் போலீசார் சோதனை செய்ய விடாமல் தகராறு செய்தார்.

சந்தேகம் அடைந்த போலீசார், மேலும் சில போலீசாரின் உதவியுடன், பிரகாசை சோதனை செய்தனர். அதில், அவர் எட்டு கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் அதை பறிமுதல் செய்தனர்.

சம்பவம் குறித்து, ஜெயிலர் சரவணக்குமார் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் கைதி பிரகாஷ், 33 மீது வழக்கு பதிவு செய்தனர்.

அவருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது, கஞ்சா கடத்தி வந்து கொடுத்தது யார், சிறை போலீசார் யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us