sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தபால் குறை தீர்ப்பு கூட்டம் 18க்குள் புகார் அனுப்பலாம்

/

தபால் குறை தீர்ப்பு கூட்டம் 18க்குள் புகார் அனுப்பலாம்

தபால் குறை தீர்ப்பு கூட்டம் 18க்குள் புகார் அனுப்பலாம்

தபால் குறை தீர்ப்பு கூட்டம் 18க்குள் புகார் அனுப்பலாம்


ADDED : ஜூன் 13, 2025 10:12 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 10:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; விரைவில் நடக்கவுள்ள மண்டல தபால் குறை தீர்ப்பு கூட்டத்துக்கு, வாடிக்கையாளர்கள், வரும் 18ம் தேதிக்குள் புகார் அனுப்ப வேண்டும்.

மேற்கு மண்டல தபால் துறை தலைவர் அறிக்கை: மண்டல அளவிலான தபால் குறை தீர்ப்பு கூட்டம், கோவை கவுண்டம்பாளையம் கே.பி., காலனி தபால் நிலைய வளாகத்தில் உள்ள, மேற்கு மண்டல தபால் துறை தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது. தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

வாடிக்கையாளர்கள், தங்களது புகார்களை, 'துணை இயக்குனர் (mails & tech), தபால் துறை அலுவலர் அலுவலகம், மேற்கு மண்டலம், கே.பி., காலனி தபால் நிலைய வளாகம், கோவை 641030' என்ற முகவரிக்கு, வரும் 18ம் தேதியோ, அதற்கு முன்னதாகவே கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். கடிதத்தின் மேலுறையில், 'தபால் குறை தீர்ப்பு கூட்ட புகார்' என்று எழுதப்பட்டிருக்க வேண்டும்.

பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில் தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புனர் மற்றும் பெறுநர் முழு முகவரி, தபால் பதிவு எண் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

தபால் சேமிப்பு கணக்கு, காப்பீடு தொடர்பான புகார்களில், சேமிப்பு கணக்கு எண், காப்பீட்டு எண், சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர், காப்பீட்டாளர் பெயர் மற்றும் முகவரி, தபால் அலுவலகத்தின் பெயர், பணப்பிடித்தம் தொடர்பான தகவல்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us