sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவில்களில் பிரதோஷ வழிபாடு

/

கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கோவில்களில் பிரதோஷ வழிபாடு

கோவில்களில் பிரதோஷ வழிபாடு


ADDED : பிப் 22, 2024 05:26 AM

Google News

ADDED : பிப் 22, 2024 05:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், சிறப்பு அபிேஷகம் நடந்தது. அதன்பின், அலங்காரம், தீபாராதனை உள்ளிட்ட வழிபாடு நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பொள்ளாச்சி மாகாளியம்மன் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நடந்த பூஜையில், ருத்ரலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீயோக நரசிம்மர் அருள்பாலித்தார்.

* கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகரில் உள்ள சோற்றுத்துறை நாதர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.

கிணத்துக்கடவு, சிவலோக நாயகி உடனமர் சிவலோக நாதர் கோவிலில் சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நிகழ்ச்சிகள் நடந்தது.

நெகமம், தேவணாம்பாளையம் அமணீஸ்வரர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ஆராதனை நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

* உடுமலை, தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், சுவாமிகளுக்கு, பால், பன்னீர் உட்பட 16 வகையான திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது. நந்தி பகவானுக்கு பாலாபிேஷகம் நடந்தது.

சிவசக்தி காலனி, ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு காசி விஸ்வநாதருக்கு பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.

பிரசன்ன விநாயகர் கோவிலில் காசி விஸ்வநாதர் சுவாமிகளுக்கும், ஏரிப்பாளையம் சித்தாண்டீஸ்வர் கோவில்களில் சிறப்பு அபிேஷகத்துடன் அலங்கார பூஜை நடந்தது.- நிருபர் குழு -






      Dinamalar
      Follow us