sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 குழந்தையுடன் கர்ப்பிணி தற்கொலை; கொடூர கணவருக்கு 7 ஆண்டு சிறை

/

 குழந்தையுடன் கர்ப்பிணி தற்கொலை; கொடூர கணவருக்கு 7 ஆண்டு சிறை

 குழந்தையுடன் கர்ப்பிணி தற்கொலை; கொடூர கணவருக்கு 7 ஆண்டு சிறை

 குழந்தையுடன் கர்ப்பிணி தற்கொலை; கொடூர கணவருக்கு 7 ஆண்டு சிறை


ADDED : நவ 13, 2025 12:36 AM

Google News

ADDED : நவ 13, 2025 12:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்ள காரணமாக இருந்ததாக, அவரது கணவருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை சின்னதடாகம், கருப்பராயன்பாளையத்தை சேர்ந்தவர் தனபால், 35; தொழிலாளி. மனைவி மகேஸ்வரி, 30. ஒன்றரை வயதில் ஆண் குழந்தை இருந்தது. தனபால் அடிக்கடி மது குடித்து விட்டு, மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி வந்தார். மகேஸ்வரி மீண்டும் கர்ப்பமான நிலையிலும், தனபால் துன்புறுத்தினார்.

கைக்குழந்தையுடன் மகேஸ்வரி, டிச., 12, 2018ல், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். இதில் கைக்குழந்தை மற்றும் வயிற்றில் இருந்த சிசுவும் இறந்தது. இதுகுறித்து, கோவை ரயில்வே போலீசார் தனபால் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு துாண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிந்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. நேற்று முன் தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. தனபாலுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சுந்தரரா ஜன் தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us