sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அசாம் மாநில கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம்

/

அசாம் மாநில கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம்

அசாம் மாநில கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம்

அசாம் மாநில கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம்


ADDED : அக் 23, 2025 11:49 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர்: அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்சில் பிரசவம் நடந்தது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சைனா குமார். மனைவி அஞ்சலி குமாரி, 28. இந்த தம்பதி கணேச புரத்தில் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. மூன்றாவது முறை கர்ப்பமான அஞ்சலி குமாரி நேற்று அன்னூர் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு வந்தார்.

அப்போது அவர் இதுவரை எந்த தடுப்பூசியும் போடவில்லை என தெரிய வந்தது. இதையடுத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு செல்லும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அன்னூர் அரசு மருத்துவமனை செவிலியர் பார்வதி, அவசரகால தொழில்நுட்ப உதவியாளர் தனபால், பைலட் ஆனந்தகுமார் ஆகியோர் 108 ஆம்புலன்சில் கோவைக்கு அழைத்து சென்றனர்.

கோவை நகரை நெருங்கும்போது அஞ்சலி குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செவிலியர் மற்றும் ஆம்புலன்ஸ் தொழில்நுட்ப உதவியாளர் ஆம்புலன் சிலேயே பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது குழந்தையின் தலையை தொப்புள் கொடி சுத்தி இருந்ததால் சிக்கலாக இருந்தது. எனினும் சுகப்பிரசவமானது.






      Dinamalar
      Follow us