ADDED : ஜூலை 17, 2025 10:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
-- நமது நிருபர் -
கோவை மத்திய சிறையில், பொள்ளாச்சி ஆனைமலை, வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்த பொன்னுசாமி, 49, என்பவர், 2024ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டிருந்தார். சிறையின் 2வது பிளாக்கில் இருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதுகுறித்து சிறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் பொன்னுசாமியை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.