/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை விதிகள் கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு
/
சாலை விதிகள் கடைபிடித்த வாகன ஓட்டிகளுக்கு பரிசு
ADDED : டிச 01, 2024 11:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; சாலை விதிகளை கடைபிடித்தவர்களுக்கு, 'விழி' அமைப்பு சார்பில், பரிசுகள் வழங்கப்பட்டன.
போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பதன் முக்கியத்துவம் குறித்து, பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றன. இதன் ஒரு பகுதியாக, 'விழி' அமைப்பு சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கோவை மேட்டுப்பாளையம் ரோடு - திருவேங்கடசாமி ரோடு சந்திப்பில், போக்குவரத்து விதிகளை முறைப்படி பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு புத்தகம், துணிப்பை பரிசுகளாக வழங்கப்பட்டன. அமைப்பின் நிறுவனர் சுரேஷ், ஸ்ரீ கிருஷ்ணா கல்லுாரி பேராசிரியர் அழகர்சாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.