/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கீரணத்தம் ஊராட்சி இணைப்பு கண்டித்து ஊர்வலம்
/
கீரணத்தம் ஊராட்சி இணைப்பு கண்டித்து ஊர்வலம்
ADDED : ஜன 13, 2025 12:09 AM
கோவில்பாளையம்; கோவை மாநகராட்சியுடன் கீரணத்தம் ஊராட்சியை இணைப்பதை கண்டித்து அ.தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த கீரணத்தம் ஊராட்சி, கோவை மாநகராட்சி உடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை கண்டித்து, எஸ். எஸ்.குளம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் கீரணத்தத்தில் நேற்றுமுன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சுகுமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், மாநகராட்சியுடன் இணைப்பதால், 100 நாள் வேலை திட்டத்தில் இந்த ஊராட்சி மக்கள் வேலை பெற முடியாது. சொத்து வரி, குடிநீர் கட்டணம் அதிகரிக்கும்.
எனவே, கீரணத்தம் ஊராட்சியாக தொடர வேண்டும். கோவை மாநகராட்சி உடன் இணைக்க கூடாது,' என நிர்வாகிகள் பேசினர்.
அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்பட 200 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.