sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாயில் கறுப்பு துணி கட்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம்

/

வாயில் கறுப்பு துணி கட்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம்

வாயில் கறுப்பு துணி கட்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம்

வாயில் கறுப்பு துணி கட்டி கோரிக்கை ஆர்ப்பாட்டம்


ADDED : ஜன 01, 2025 07:00 AM

Google News

ADDED : ஜன 01, 2025 07:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடந்தது.

கோவை மண்டலம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம், பொள்ளாச்சி போக்குவரத்து கழக கிளை 2 முன் நடந்தது.

கோவை மண்டல தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர்கள் அங்கமுத்து, வேலுச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

மாநிலக்குழு உறுப்பினர்கள் வடிவேல், காளிமுத்து பேசினர். மண்டல துணை பொதுச்செயலாளர் சேதுராமன், கோரிக்கைகள் குறித்து பேசினார். மண்டல நிர்வாகி உமா நன்றி கூறினார்.

அதில், 109 மாத நிலுவையுடன் பயணப்படி உயர்வு, 21 மாத காலப்பணப்பலன்கள், ஓய்வு பெறும் நாளில் பணப்பலன்கள், பழைய பென்சன் திட்டம் செயல்படுத்த வேண்டும். வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us