/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி. கல்லுாரி சிறப்பு விருதுக்கு தேர்வு
/
பி.எஸ்.ஜி. கல்லுாரி சிறப்பு விருதுக்கு தேர்வு
ADDED : அக் 14, 2025 09:57 PM

கோவை; பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரியின் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மையம், மாநில அளவில், சிறந்த 15 தொழில்முனைவோர் வளர்ப்பு மையங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.
கல்லுாரி நிர்வாகத்தினர் கூறியதாவது:
கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடந்த, தமிழ்நாடு குளோபல் ஸ்டார்ட்அப் சம்மிட் 2025 நிகழ்வில், இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. மாநில திட்ட ஆணைய துணை தலைவர் ஜெயரஞ்சன், ஸ்டாட் அப் டி.என். இயக்குனர் சிவராஜ் ராமநாதன் ஆகியோர் இவ்விருதை வழங்கினர்; பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லுாரி புத்தாக்க மைய குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
இந்த அங்கீகாரத்தின் ஒரு பகுதியாக, மாநில அரசு எம்.எஸ்.எம்.இ. துறையின் ஸ்டார்ட்அப் டி.என் சார்பில், கல்லுாரிக்கு ரூ. 5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
850க்கும் மேற்பட்ட புதுமை மற்றும் தொழில்முனைவோர் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பல மாணவர் ஸ்டார்ட்அப்கள் எம்.எஸ்.எம்.இ. மற்றும் டி.பி.ஐ.ஐ.டி. துறைகளில், பதிவு செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.