sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

/

கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

கலெக்டரிடம் பொதுமக்கள் மனு


ADDED : ஜன 16, 2025 05:32 AM

Google News

ADDED : ஜன 16, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : அசோகபுரம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்க கூடாது என, கலெக்டரிடம், பொதுமக்கள் மனு அளித்தனர்.

பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அசோகபுரம் ஊராட்சியை கோவை மாநகராட்சியுடன் இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அசோகபுரம் ஊராட்சி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அசோகபுரம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவர் நடராஜன் தலைமையில், அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் ஊராட்சியின் முன்னாள் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள், பொதுமக்கள், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் முகாமில் மனு அளித்தனர்.

அதில், அசோகபுரம் ஊராட்சியில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். எனவே அசோகபுரம் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என, தெரிவித்தனர்.

மேலும், மனுவின் நகலை முதலமைச்சர், தலைமைச் செயலாளர், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர், முதன்மை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கும் அனுப்பினர்.






      Dinamalar
      Follow us