sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி

/

குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி

குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி

குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி


ADDED : ஆக 03, 2025 09:23 PM

Google News

ADDED : ஆக 03, 2025 09:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் நகராட்சி அருகே, சிக்கதாசம்பாளையம் ஊராட்சி அமைந்துள்ளது. திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து எட்டு நாட்களுக்கு ஒரு முறை விநியோகம் செய்யப்படுகிறது.

தற்போது அன்னூர் சாலை, நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. அதனால் சாலையின் ஓரங்களில் உள்ள மரங்களை வெட்டும் போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்படுகின்றன.

இதை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதால், ஊராட்சிக்கு சரியாக குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்படுகிறது. போதிய குடிநீர் கிடைக்காமல் சிக்கதாசம்பாளையம் ஊராட்சி மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து சிக்கதாசம்பாளையம் ஊராட்சி தனி அலுவலர் விடுத்துள்ள அறிக்கையில்,' சாலை விரிவாக்கத்தால் குடிநீர் சரியாக விநியோகம் செய்ய முடியவில்லை. இதனால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

வருகின்ற குடிநீரின் அளவைப் பொறுத்து, ஒவ்வொரு வார்டாக, குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என்று கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us