sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; ஜூலை 2ம் தேதி துவங்குகிறது

/

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; ஜூலை 2ம் தேதி துவங்குகிறது

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; ஜூலை 2ம் தேதி துவங்குகிறது

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்; ஜூலை 2ம் தேதி துவங்குகிறது


ADDED : ஜூன் 29, 2025 11:19 PM

Google News

ADDED : ஜூன் 29, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; கால்நடைத்துறை, பொள்ளாச்சி கோட்டத்தில், 86 ஆயிரம் கால்நடைளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோமாரி நோய் தாக்கிய கால்நடைகளின் உமிழ்நீர், சிறுநீர், சாணம் வாயிலாக, மற்ற கால்நடைகளுக்கும் எளிதில் பரவும். நோய் தாக்கிய மாட்டு பாலை குடிக்கும் கன்றுகளுக்கு, இருதய தசை அழற்சி ஏற்பட்டு இறந்து விடும்.

விவசாயிகளுக்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தும், கால்நடைகளுக்கான இந்நோயை கட்டுப்படுத்துவதற்காக, தேசிய நோய் தடுப்பூசி திட்டத்தின் கீழ், தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இந்நோய்க்கான தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி, வரும், ஜூலை 2ம் தேதி துவங்கும் கோமாரி நோய் தடுப்பூசி முகாம், தொடர்ந்து, 21 நாட்களுக்கு நடத்தப்படவுள்ளது.

பொள்ளாச்சி கோட்டத்தை பொறுத்தமட்டில், 86 ஆயிரம் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, 33 கால்நடை மருந்தகங்களில், ஒரு கால்நடை டாக்டர், ஒரு கால்நடை ஆய்வாளர், ஒரு கால்நடை உதவியாளர் அடங்கிய குழுவினர் இதற்கான பணியில் ஈடுபடவும் உள்ளனர்.

இவர்கள், கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேரடியாகச் சென்று கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்த உள்ளனர்.

எனவே, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர், தங்களது பசுக்கள், எருதுகள், எருமைகள் மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு, கோமாரி நோய் தடுப்பூசியை, தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.----






      Dinamalar
      Follow us