sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

/

ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு

ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு


ADDED : அக் 17, 2024 10:17 PM

Google News

ADDED : அக் 17, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில், நேற்று பாலக்காடு கோட்ட மேலாளர் அருண்குமார் சதுர்வேதி ஆய்வு மேற்கொண்டார். இதில், ரயில்வே ஸ்டேஷன் நிறைகள், குறைகள் குறித்து பயணியர் மற்றும் ரயில்வே சங்கத்தினரிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, ரயில்வே நடைமேடை, தண்டவாளங்கள், சிக்னல் போன்றவைகளை ஆய்வு செய்தார். இறுதியாக ரயில் பயணியர் நலச்சங்கத்தினர், கோட்ட மேலாளரிடம், தற்போது உள்ள நடைமேடை அளவு, 18 பெட்டிகள் நிற்கும் அளவில் உள்ளது. ஆனால், கோவை ரயிலில் 24 பெட்டிகள் இருப்பதால் பயணியர் சிலர், தண்டவாள பகுதியில் இறங்கி செல்ல வேண்டியுள்ளது.

எனவே, நடை மேடையை நீடிக்க வேண்டும். மேலும், ரயில்வே ஸ்டேஷனில் 'ரிசர்வேஷன் கவுன்டர்', ரயில் வரும் நேரம் குறித்த டிஜிட்டலில் பெயர் பலகை வேண்டும், என, கோரிக்கை வைத்தனர்.

மேலும், ரயில் பயணியர் நலச்சங்கத்தின் சார்பில், மயிலாடுதுறை விரைவு ரயில் கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு இயக்க வேண்டும் என, மனு அளித்தனர்.






      Dinamalar
      Follow us