sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தறாங்க!

/

'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தறாங்க!

'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தறாங்க!

'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் ரயில்வே ஸ்டேஷனை மேம்படுத்தறாங்க!


UPDATED : ஏப் 15, 2023 09:33 AM

ADDED : ஏப் 15, 2023 03:20 AM

Google News

UPDATED : ஏப் 15, 2023 09:33 AM ADDED : ஏப் 15, 2023 03:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், 6.33 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது. விரைவில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மத்திய அரசின், 'அம்ரித் பாரத்' திட்டம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்வே சந்திப்பு அல்லது ஸ்டேஷன்களை தொலைநோக்கு பார்வையில் மேம்படுத்துதல் ஆகும்.

குறிப்பாக, பயணியருக்கான இருக்கைகள், காத்திருப்பு அறைகள், கழிவறை வசதிகள், மேற்கூரைகள், சுத்தமான குடிநீர் வழங்கல், குளிரூட்டப்பட்ட பயணியர் காத்திருப்பு அறை, ரயில் வருகை மற்றும் புறப்பாடு குறித்து டிஜிட்டல் திரைகள் அமைக்கப்படுகின்றன. மாற்றுத்திறன் பயணியருக்கு வசதி ஏற்படுத்துதல், வாகன காப்பிடம் மற்றும் தேவையான கட்டடங்கள் கட்டுவதாகும்.

இத்திட்டத்தின் கீழ், 1,275 ரயில்வே ஸ்டேஷன்களை நவீன மயமாக்கி மேம்படுத்தப்படுகிறது. அதில், தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஆறு கோட்டங்களில், தலா, 15 சந்திப்புகள் அடையாளம் காணப்பட்டு, வரும், மார்ச், 2024க்குள் பணிகளை முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டதாக தெரிகிறது.

அதில், பாலக்காடு கோட்டத்துக்குட்பட்ட ரயில்வே ஸ்டேஷன்களில் பணிகள் மேற்கொள்ள மின் ஒப்பந்தபுள்ளி கோரப்பட்டுள்ளது.பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷனில் மறு சீரமைப்பு செய்தல், 6.33 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது.

ரயில் பயணியர் நலச்சங்கத்தினர் கூறுகையில், 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

அதில், பிளாட்பார்ம் கூரைகைளை விரிவுப்படுத்துதல் உள்ளிகட்ட பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us