/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மழை சீசன் துவக்கம்; இளநீர் விலை குறைவு
/
மழை சீசன் துவக்கம்; இளநீர் விலை குறைவு
ADDED : ஜூலை 20, 2025 10:29 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகாவில், இளநீர் பண்ணை விலை கடந்த வாரத்தை விட, 2 ரூபாய் குறைந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, கடந்த வார விலையை ஒப்பிடுகையில், இரண்டு ரூபாய் குறைக்கப்பட்டு, 45 ரூபாய் என நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 18,500 ரூபாயாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
தற்போது, இளநீர் வரத்து கடந்த மாதத்தை விட கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக சிவப்பு நிற இளநீர் வரத்து அதிகமாக உள்ளது. இத்துடன் தேனி, கம்பம் போன்ற பகுதிகளிலும் இளநீர் வரத்து அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் டெல்லி மற்றும் சில மாநிலங்களில் மழைப்பொழிவு இருப்பதால் இளநீர் விலை குறைந்துள்ளது. இவ்வாறு, தெரிவித்தார்.