/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனை அருகே ஆக்கிரமிப்பு அகற்றுங்க; நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
/
மருத்துவமனை அருகே ஆக்கிரமிப்பு அகற்றுங்க; நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
மருத்துவமனை அருகே ஆக்கிரமிப்பு அகற்றுங்க; நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
மருத்துவமனை அருகே ஆக்கிரமிப்பு அகற்றுங்க; நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
ADDED : நவ 07, 2024 08:06 PM

பொள்ளாச்சி ; 'மருத்துவமனை தடுப்புச்சுவருக்கு அருகே உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,' என நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், மாதாந்திர நோயாளிகள் நலச்சங்க கூட்டம் நடந்தது. சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா தலைமை வகித்தார். கோவை மாவட்ட இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன், மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜா முன்னிலை வகித்தனர்.
இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் மாரிமுத்து, நகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதில், இரண்டு மாதத்தில் செலவு செய்த செலவினங்களுக்கு பின் ஏற்பு ஆணை வழங்க கோரப்பட்டது.
மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது:
நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில், நவீன சமையலகம் அமைக்க வேண்டிய கட்டுமான பணிகளுக்கு பொதுப்பணித்துறை இடம், திட்ட அறிக்கை கோரப்பட்டது.
தனியார் நிறுவனங்களிடம் இருந்து மருத்துவமனைக்கு வேண்டிய உபகரணங்கள், சப் - கலெக்டர் வாயிலாக பெற்றுத்தர விண்ணப்பம் அளிக்கப்பட்டது.
எம்.எல்.ஏ., தொகுதி நிதியில் இருந்து நடக்கும் திட்டங்கள் குறித்து, சப் - கலெக்டரிடம் விளக்கிக்கூறப்பட்டது. மருத்துவமனையில் இரண்டு நுழைவாயிலும், தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடுப்பு அமைத்து விபத்து நடக்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
மருத்துவமனையின் தடுப்புச்சுவருக்கு அருகே உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். எம்.பி., தொகுதி நிதியில் இருந்து மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் பெற்றுத்தர விண்ணப்பம் அளிக்கப்பட்டது குறித்து விளக்கப்பட்டது.
ரத்த வங்கி முகாம் நடத்த ஒரு வாகனம் தேவை என்பது குறித்து கூறப்பட்டது. நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்துக்கு அழைத்து செல்ல ஒரு பேட்டரி வாகனம் தேவை என கோரப்பட்டது.
400 பேருக்கு சமைக்கப்பட்ட உணவை நோயாளிகளுக்கு வழங்க, மூன்று சக்கர மோட்டார் வாகனம் தேவை என கோரப்பட்டது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.