sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 நோய் தடுக்கும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

/

 நோய் தடுக்கும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

 நோய் தடுக்கும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை

 நோய் தடுக்கும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை


ADDED : டிச 11, 2025 06:48 AM

Google News

ADDED : டிச 11, 2025 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்: 'ஊராட்சிகள், பேரூராட்சிகளில் கொசு ஒழிப்பு பணிகளில் ஈடுபடும், மஸ்தூர் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், என, தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் கணேசன்( பொ), செயலாளர் சுபைதா பேகம், பொருளாளர் மேரி ராணி ஆகியோர் கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடித விபரம் :

நோய் தடுப்பு உள்ளிட்ட, பல்வேறு சுகாதார பணிகளில் மஸ்தூர் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கான ஊதியம் மற்ற மாவட்டங்களை காட்டிலும், கோவை மாவட்டத்தில் குறைவாக உள்ளது.

நாள் ஒன்றுக்கு, 350 ரூபாய்தான் வழங்கப்படுகிறது. குடும்பம் நடத்த முடியாமல் சிரமப்படுகின்றனர். அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட, அவசியம் ஊதிய உயர்வு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us