/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் மோசடி
/
ஓய்வு பெற்ற வங்கி மேலாளரிடம் மோசடி
ADDED : பிப் 19, 2026 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: வடவள்ளியை சேர்ந்தவர் 62 வயது நபர். வங்கியில் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என சமூக வலைதளமொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதில் கொடுக்கப்பட்ட செயலியை பயன்படுத்தி, பல்வேறு கட்டங்களாக ரூ.66 லட்சம் முதலீடு செய்தார். செயலியில் முதலீடு செய்ததற்கு லாபம் இருப்பதாக காட்டப்பட்டது.
அத்தொகையை தனது வங்கிக்கணக்கிற்கு மாற்ற முயற்சித்தார்; முடியவில்லை.மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

