/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
/
வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
ADDED : ஜன 31, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; வாரப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலக திறப்பு விழா நடந்தது.
சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி வருவாய் அலுவலர் அலுவலக கட்டடம் மற்றும் குடியிருப்பு, ரூ. 28 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்பட்டது. அதை, காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தொடர்ந்து, குத்துவிளக்கு ஏற்றி கல்வெட்டு திறக்கும் நிகழ்வு அலுவலகத்தில் நடந்தது. கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், தாசில்தார் தனசேகர், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மோகன்ராஜ், வெங்கடேஷ், கிராம நிர்வாக அலுவலர் கங்காதரன் மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் மகாலிங்கம், முத்து மாணிக்கம். உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.