sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

செஞ்சிலுவை சங்கத்தின் முன் 'ரவுண்டானா' ; மாற்றியமைக்கிறது மாநகராட்சி

/

செஞ்சிலுவை சங்கத்தின் முன் 'ரவுண்டானா' ; மாற்றியமைக்கிறது மாநகராட்சி

செஞ்சிலுவை சங்கத்தின் முன் 'ரவுண்டானா' ; மாற்றியமைக்கிறது மாநகராட்சி

செஞ்சிலுவை சங்கத்தின் முன் 'ரவுண்டானா' ; மாற்றியமைக்கிறது மாநகராட்சி


ADDED : பிப் 20, 2025 06:31 AM

Google News

ADDED : பிப் 20, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை செஞ்சிலுவை சங்கம் முன்புள்ள 'ரவுண்டானா' வடிவமைப்பை மாற்றியமைக்கும் பணியை, மாநகராட்சி துவக்கியுள்ளது.

கோவை செஞ்சிலுவை சங்கம் முன், ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்துக்கு எதிரே அமைந்துள்ள 'ரவுண்டானா' வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.

வ.உ.சி., மைதானத்தில் இருந்து வருவோர், ஓசூர் ரோடு வழியாக வருவோர், உப்பிலிபாளையம், ரயில்வே ஸ்டேஷன் ரோடு, ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு, ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாகனங்களில் வருவோர், செஞ்சிலுவை சங்க ரவுண்டானாவை சுற்றிச் செல்ல வேண்டும். அதனால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.

சமீபத்தில், மாநகராட்சி மூலமாக 'ரவுண்டானா' கட்டமைப்பு சீரமைக்கப்பட்டது. போக்குவரத்து நெருக்கடி சீராகாததால், மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழுவினர், போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி பொறியியல் பிரிவினர் இணைந்து, அப்பகுதியை ஆய்வு செய்தனர். சில மாற்றங்கள் செய்து, 'டிவைடர்'கள் அமைத்து, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

அதில், ஓசூர் ரோடு, வ.உ.சி., ரோடு, ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்ட்ஸ் காலேஜ் ரோடு என நான்கு வழித்தடங்களில் இருந்து 'ரவுண்டானா'வை நோக்கி, ஒரே வழித்தடத்தில் ஏராளமான வாகனங்கள் வந்ததால், போக்குவரத்து நெருக்கடி தீரவில்லை. கோர்ட் வளாகம் அருகே இடம் குறுகலாக இருந்ததால், வாகனங்கள் தேங்கின. வக்கீல்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெங்களூருவில் இருந்து சிறப்பு குழு வரவழைக்கப்பட்டு, வாகனங்களின் போக்குவரத்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, வடிவமைப்பை மாற்றி வரைபடம் தயாரிக்கப்பட்டது. அதன்படி, 'ரவுண்டானா' மாற்றியமைக்கப்படுகிறது. பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இனி இப்படித்தான்!

l உப்பிலிபாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள், செஞ்சிலுவை சங்கம் முன் வலதுபுறம் திரும்பி, கலெக்டர் அலுவலகம், ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் செல்லலாம். l ரேஸ்கோர்ஸ், ஆர்ட்ஸ் காலேஜ் ரோட்டுக்குச் செல்ல வேண்டுமெனில், ரேஸ்கோர்ஸ் போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள பாதையில் செல்ல வேண்டும்.l ரேஸ்கோர்ஸ், ஆர்ட்ஸ் காலேஜ் ரோட்டில் வருவோர், அவிநாசி ரோட்டுக்குச் செல்ல வேண்டுமெனில், செஞ்சிலுவை சங்கம் அருகே வலதுபுறம் திரும்பிச் செல்ல வேண்டும். l ரயில்வே ஸ்டேஷன் ரோட்டுக்கு, நேராக சென்று விடலாம். ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்து வருவோர் செல்லும் வழித்தடங்களில், எந்த மாற்றமும் கிடையாது.








      Dinamalar
      Follow us