sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின் சம்பளம்

/

ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின் சம்பளம்

ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின் சம்பளம்

ஆர்.டி.ஓ., அலுவலக ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பின் சம்பளம்


ADDED : ஜூன் 08, 2025 10:37 PM

Google News

ADDED : ஜூன் 08, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, மூன்று மாதங்களுக்குப் பின் சம்பளம் வழங்கப்பட்டது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மாறுதல் செய்யப்பட்டனர். மாறுதலாகி சென்றவர்களுக்கு பதிலாக, பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.

ஆனால் அவர்கள் பொறுப்பு அதிகாரிகள் என்பதற்கான உத்தரவு, அரசிடமிருந்து வரவில்லை. உத்தரவு வந்தபின்பே அதிகாரிகள், பணியாளர்கள் சம்பளத்துக்கான கையெப்பமிட வேண்டும்.

இதன் காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக கோவை தெற்கு மற்றும் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் இருந்தது.

இந்த தகவல் வெளியானதும், இரு நாட்களுக்கு முன் பில் தயாரித்து, சம்பளம் வழங்கப்பட்டது. இதனால் அனைவரும் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us