sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 ஒற்றை பெற்றோர் மாணவர் 500 பேருக்கு உதவி தொகை

/

 ஒற்றை பெற்றோர் மாணவர் 500 பேருக்கு உதவி தொகை

 ஒற்றை பெற்றோர் மாணவர் 500 பேருக்கு உதவி தொகை

 ஒற்றை பெற்றோர் மாணவர் 500 பேருக்கு உதவி தொகை


ADDED : ஜன 01, 2026 05:03 AM

Google News

ADDED : ஜன 01, 2026 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ், மாதம் 4 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. பயனாளர்களை தேர்வு செய்ய, குழந்தைகள் பாதுகாப்பு துறையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கள ஆய்வு செய்து பரிந்துரைப்பதன் பேரில் தொகை 3 ஆண்டுகள் வழங்கப்படும்.

ஒற்றை பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயதுக்குள் இருத்தல் அவசியம்.

ஆதார் அட்டை, பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் இறப்பு சான்றிதழ், பள்ளியின் நன்னடத்தை சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

நிர்ணயித்த இலக்கான 500 பேரில், 250 மாணவர்களுக்கு ஏற்கனவே தொகை வழங்கப்படுகிறது. மீதி 250 பேரை தேர்வு செய்யும் பணி நடக்கிறது என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் வந்துள்ளன என்றும் கூறினர்.






      Dinamalar
      Follow us