sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பள்ளி சீரமைப்பு பணி; ஓடுகள் விழும் அபாயம்

/

பள்ளி சீரமைப்பு பணி; ஓடுகள் விழும் அபாயம்

பள்ளி சீரமைப்பு பணி; ஓடுகள் விழும் அபாயம்

பள்ளி சீரமைப்பு பணி; ஓடுகள் விழும் அபாயம்


ADDED : பிப் 04, 2025 11:51 PM

Google News

ADDED : பிப் 04, 2025 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் அரசு பள்ளி கட்டடத்தில் முறையாக சீரமைப்பு பணி மேற்கொள்ளாததால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 102 மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் உள்ள இரண்டு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் சீரமைப்பு பணிகள், 1.9 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.

இதில், பள்ளி கட்டடத்தின் சுவர் ஓரத்தில், முறையாக கான்கிரீட் தடுப்புகள் அமைக்கப்படாததால், ஓடுகள் நழுவி விழும் என, மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், பள்ளி கட்டடத்தின் உள் பகுதியில் வெளிச்சத்திற்காக கண்ணாடி பதிக்கப்பட்ட ஓடுகள் அமைக்கவும் வலியுறுத்துகின்றனர்.

மக்கள் கூறுகையில், 'பள்ளி கட்டடத்தின் ஓரத்தில் ஓடுகள் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் கான்கிரீட் எதுவும் அமைக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளதால், காற்றுக்கு ஓடுகள் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே, பாதுகாப்பு கருதி பள்ளி கட்டடத்தை முறையாக சீரமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us