/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேவை குறைபாடு; இழப்பீடு தர உத்தரவு
/
சேவை குறைபாடு; இழப்பீடு தர உத்தரவு
ADDED : மார் 01, 2026 05:27 AM
கோவை: ஒண்டிப்புதூரை சேர்ந்த ரமேஷ். மனைவி ரெஜினா ஆகியோர், வெள்ளலூர் பகுதியில் வீடு கட்டுவதற்காக, 2022 ஆகஸ்டில், ஜஹாரம் இன்ஜினீயர்ஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்துடன் 31 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தனர்.
கட்டுமான பணிகள் முடிந்து வீட்டை ஒப்படைத்தனர். ஒப்பந்தப்படி பணி முடிக்காமல் குறைபாடு வைத்திருந்தனர். கட்டட சுவர், ஜன்னல்களில் விரிசல் ஏற்பட்டது. தம்பதியர், கட்டுமான நிறுவனம் இழப்பீடு வழங்க கோரி, நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.
விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி, உறுப்பினர் சுகுணா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில், மனுதாரருக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு தொகை, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.

