sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆளிறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்

/

ஆளிறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்

ஆளிறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்

ஆளிறங்கும் குழியில் வெளியேறும் கழிவுநீர்


ADDED : மே 06, 2025 11:20 PM

Google News

ADDED : மே 06, 2025 11:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதால், வாகன ஓட்டுநர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

பொள்ளாச்சியில் குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் ஆள் இறங்கும் குழிகள் சேதம், கழிவுநீர் வெளியேறுவது போன்ற பிரச்னைகளால் மக்கள் சிரமப்படுகின்றனர்.

அதில், பாலகோபாலபுரம் வீதியில் பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழியில் இருந்து கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. கழிவுநீர் பொங்கி ரோட்டில் செல்வதால், வாகன ஓட்டுநர்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'அதிகளவு கழிவுநீர் வெளியேறுவதால், துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியை கடந்து செல்வதே சிரமமாக உள்ளது. ஆள் இறங்கும் குழியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us