ADDED : ஜூலை 30, 2025 08:48 PM
அன்னுார்; குப்பனுார், வடக்கலூர் ஊராட்சிகளுக்கு, ஆணையூரில் நாளை ( 1ம் தேதி) 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழக அரசு சார்பில், கடந்த ஜூலை 15ம் தேதி முதல், 'உங்களுடன் ஸ்டாலின்' என்னும் முகாம் ஒவ்வொரு தாலுகாவிலும் நடைபெற்று வருகிறது. அன்னுார் தாலுகாவில், ஏழாம் கட்டமாக, ஆணையூர், ராணி மகாலில், நாளை (1ம் தேதி) முகாம் நடைபெறுகிறது. காலை 9:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை முகாம் நடைபெறும். முகாமில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 15 துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
'குப்பனுார், வடக்கலூர் ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுக்களை, உரிய ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்கலாம்,' என, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.