sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஞாயிறு தினத்தன்று சிறப்பு வகுப்பு

/

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஞாயிறு தினத்தன்று சிறப்பு வகுப்பு

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஞாயிறு தினத்தன்று சிறப்பு வகுப்பு

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஞாயிறு தினத்தன்று சிறப்பு வகுப்பு


ADDED : மார் 30, 2025 10:48 PM

Google News

ADDED : மார் 30, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க செய்யும் வகையில், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன், ஞாயிறு தினத்தன்று, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது

பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், ஞாயிறு தினத்தன்று, அந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அன்றைய தினம், அடுத்து தேர்வு எழுதவுள்ள பாடத்தை தேர்ந்தெடுத்து, மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படுகிறது.

தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, பொதுத்தேர்வு கடந்த, 28ம் தேதி துவங்கிய நிலையில், ஏப்., 15ம் தேதி வரை, குறிப்பிட்ட நாள் இடைவெளியில் நடத்தப்படுகிறது.

இதனால், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன், ஞாயிறு தினத்தன்றும் சிறப்பு வகுப்பு நடத்தப்படுகிறது.

குறிப்பாக, பொதுத்தேர்வுக்கு ஏற்றாற்போல், பள்ளி அளவில் தேர்வு நடத்தியும், அதன் வாயிலாக பின்தங்கிய மாணவர்களுக்கு, தீவிர பயிற்சியும் அளிக்கப்படுகிறது. அப்போது, அந்தந்த பாட ஆசிரியர் மட்டும் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்படுவார்.

கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு இந்த சிறப்பு வகுப்பு பெரிதும் பயன்படும். ஆசிரியர்களும் மாணவர்களுக்கு முழுமையாக பயற்சி அளிக்க முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us