/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'லோக் அதாலத்' விசாரணைக்கு 17ல் சிறப்பு அமர்வு துவக்கம்
/
'லோக் அதாலத்' விசாரணைக்கு 17ல் சிறப்பு அமர்வு துவக்கம்
'லோக் அதாலத்' விசாரணைக்கு 17ல் சிறப்பு அமர்வு துவக்கம்
'லோக் அதாலத்' விசாரணைக்கு 17ல் சிறப்பு அமர்வு துவக்கம்
ADDED : நவ 14, 2025 09:23 PM
பொள்ளாச்சி: கோவை மாவட்டத்தில், தேசிய 'லோக்அதாலத்' விசாரணை டிசம்பரில் நடைபெறுவதை முன்னிட்டு, சிறப்பு அமர்வு, வரும் 17ம் தேதி துவங்குகிறது.
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய 'லோக்அதலாத்' விசாரணை, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, மதுக்கரை, சூலுார் அன்னுார் ஆகிய நீதிமன்ற வளாகத்தில் டிச., 13ல் நடைபெறுகிறது. நிலுவையிலுள்ள வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய சிறு குற்ற வழக்குகள், காசோலை மோசடி, வாகன விபத்து இழப்பீடு, நில ஆர்ஜிதம் , சிவில் வழக்குகள், விற்பனை வரி, வருமான வரி, தொழிலாளர் மற்றும் குடும்ப நலன் உள்ளிட்டவழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.
நிலுவை வழக்குகளில் லோக்அதாலத்தில் தீர்வு காண விரும்புவோருக்கு, வரும் 17ம் தேதி முதல், மாவட்ட நீதிபதிகள் தலைமையில் சிறப்பு அமர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

