/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'பிராங்க்' வீடியோவால் மாணவர் தற்கொலை
/
'பிராங்க்' வீடியோவால் மாணவர் தற்கொலை
ADDED : ஜன 05, 2025 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:திருப்பூர், பச்சையப்பன் நகர் முதல் வீதியை சேர்ந்தவர் சத்தியநாராயணன், 21; கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்தார். நேற்று முன்தினம் கல்லுாரியில், அவரது சக வகுப்பு மாணவர்கள், 'பிராங்க்' என்ற பெயரில், சத்தியநாராயணனை கிண்டல் செய்து, அடித்து வீடியோ எடுத்துள்ளனர்.
இதில், மனமுடைந்த சத்தியநாராயணன், தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருப்பூர் மாவட்டம் நல்லுார் போலீசார், விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், மாணவனை பிராங்க் செய்து வீடியோ எடுத்த சக மாணவர்கள் மூவரையும், கல்லுாரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.

