sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மண் மாதிரி சேகரிப்புக்கு மாணவர்கள் செயல்விளக்கம்

/

மண் மாதிரி சேகரிப்புக்கு மாணவர்கள் செயல்விளக்கம்

மண் மாதிரி சேகரிப்புக்கு மாணவர்கள் செயல்விளக்கம்

மண் மாதிரி சேகரிப்புக்கு மாணவர்கள் செயல்விளக்கம்


ADDED : ஏப் 02, 2025 10:15 PM

Google News

ADDED : ஏப் 02, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சட்டக்கல்புதூரில் கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள், மண் மாதிரி சேகரிப்பு குறித்து, விவசாயிகளுக்கு செயல்விளக்கம் காண்பித்தனர்.

கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சி, சட்டக்கல்புதூர் கிராமத்தில், கோவை வேளாண் பல்கலை மாணவர்கள், கிராம தங்கள் திட்டத்தில் செயல்பட்டு வருகின்றனர். அப்பகுதி விவசாயிகளுக்கு, மண் மாதிரி சேகரிப்பு முறைகளை செயல்விளக்கத்துடன் காண்பித்தனர்.

இதில், மண் சேகரிப்பு செய்ய எவ்வளவு ஆழத்தில் எடுக்க வேண்டும். ஒரு ஏக்கரில் எத்தனை இடத்தில் மண் எடுக்க வேண்டும். எங்கு மண் எடுக்க வேண்டும். எங்கு எடுக்கக்கூடாது எனவும், விரிவாக எடுத்துரைத்தனர்.

மண் பரிசோதனையின் போது, மண்ணில் உள்ள பலவிதமான சத்துக்கள் அளவு தெரியவரும். தேவைக்கு ஏற்ப, பேரூட்டம், நுண்ணுாட்டம் அளிக்கலாம். இதனால் காலநிலைக்கேற்ப பயிர் செய்து பயன்பெறலாம், என, வேளாண் மாணவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us