sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விளைநில பரப்பை அதிகரிக்க மானியம்

/

விளைநில பரப்பை அதிகரிக்க மானியம்

விளைநில பரப்பை அதிகரிக்க மானியம்

விளைநில பரப்பை அதிகரிக்க மானியம்


ADDED : ஏப் 28, 2025 06:21 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 06:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு வட்டாரத்தில், விளைநில பரப்பு அளவை அதிகரிக்க தேசிய தோட்டக்கலை இயக்கம் 2025 -- 26 சார்பில், பல்வேறு நாற்றுகள், 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.

இதில், தக்காளி நாற்றுகளுக்கு, 9,600 ரூபாய், 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. 50 ஏக்கர் வரை அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மிளகாய், 5 ஆயிரம் ரூபாய் மானியத்தில் வழங்கப்படுகிறது. 12.5 ஏக்கர் பரப்பளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கொத்த மல்லி மற்றும் பப்பாளிக்கு, 10 ஆயிரம் ரூபாய் மானியத்தில், 5 ஏக்கர் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

திசு வாழைக்கு, 16,800 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு, 12.5 ஏக்கர் அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில், ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கர் மட்டுமே, 100 சதவீதம் மானியத்தில் நாற்றுகள் வழங்கப்படும்.

மேலும், கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள கிராம விவசாயிகளுக்கு, 80 சதவீதம் முன்னுரிமையும், மற்ற கிராம விவசாயிகளுக்கு 20 சதவீதமும் முன்னுரிமை அளிக்கப்படும்.

இத்திட்டங்களில் பயன்பெற, உழவன் செயலி அல்லது தோட்டக்கலை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இத்தகவலை, தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us