sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மூன்றடுக்கு பாதுகாப்பில் சூலுார் விமானப்படைதளம்

/

மூன்றடுக்கு பாதுகாப்பில் சூலுார் விமானப்படைதளம்

மூன்றடுக்கு பாதுகாப்பில் சூலுார் விமானப்படைதளம்

மூன்றடுக்கு பாதுகாப்பில் சூலுார் விமானப்படைதளம்


ADDED : பிப் 23, 2024 10:49 PM

Google News

ADDED : பிப் 23, 2024 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்:பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி, சூலுார் விமானப்படைத்தளத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி வரும், 27ம்தேதி தமிழகம் வருகிறார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடக்கும் 'என் மண் என் மக்கள்' நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.

27ம் தேதி சூலுார் விமானப்படைத் தளத்துக்கு தனி விமானத்தில் பிரதமர் வருகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் பல்லடம் செல்ல உள்ளார். இதையொட்டி சூலூர் விமானப்படைத் தளத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

எஸ்.பி., பத்ரி நாராயணன் உத்தரவின்படி, சூலுார் போலீஸ் ஸ்டேஷனில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், டி.எஸ்.பி., தங்கராமன் தலைமையில் நடந்தது. விமானப்படைத்தளத்துக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு வழங்கி கண்காணிப்பது, மூன்று இடங்களில் தற்காலிக சோதனை சாவடி அமைத்து வாகன சோதனை செய்வது, விமானப்படைத்தளத்தை சுற்றியுள்ள வீடுகளில் குடியிருப்போர், புது நபர்கள் யாராவது வந்துள்ளனரா என, சோதனை செய்வது என முடிவு செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர்கள் மாதையன், சண்முகவேல் மற்றும் எஸ்.ஐ., க்கள் பங்கேற்றனர்.

வாகன சோதனை தீவிரம்


திருச்சி ரோட்டில் காடாம்பாடி ஊராட்சி எல்லையில் தற்காலிக செக்போஸ்ட் அமைக்கப்பட்டு, போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

எஸ்.ஐ., தலைமையில் போலீசார், சுழற்சி முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us