/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூலி உயர்வு பேச்சு வார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை ஒப்பந்தம் ஏற்படாததால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றம்
/
கூலி உயர்வு பேச்சு வார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை ஒப்பந்தம் ஏற்படாததால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றம்
கூலி உயர்வு பேச்சு வார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை ஒப்பந்தம் ஏற்படாததால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றம்
கூலி உயர்வு பேச்சு வார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை ஒப்பந்தம் ஏற்படாததால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றம்
ADDED : ஆக 10, 2024 03:00 AM
சோமனூர்;கூலி உயர்வு பேச்சுவார்த்தையில், இரண்டாவது முறையும், ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காததால், கூட்டம் மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
கோவை, திருப்பூர் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விசைத்தறி உள்ளது. இதில், லட்சக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
கூலி உயர்வு பெற்று தர வேண்டும், என, இரு மாவட்ட நிர்வாகங்களிடம் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து இருந்தனர். லோக்சபா தேர்தல் உள்ளிட்ட காரணங்களால், ஐந்து மாதமாக பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை.
அழைப்பு
இதையடுத்து கூட்டமைப்பினர், கலெக்டர்களிடம் நினைவூட்டல் மனு அளித்தனர். இந்நிலையில், விசைத்தறி கூட்டமைப்பு நிர்வாகிகள், ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். கடந்த, ஜூலை, 22 ல் கோவை தொழிலாளர் நல துறை அலுவலகத்தில், உதவி கமிஷனர் ராஜ்குமார் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில், விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தரப்பில், அவிநாசி சங்க தலைவர் முத்துசாமி, தெக்கலூர் தலைவர் பொன்னுசாமி, பெருமாநல்லூர் செயலாளர் துரைசாமி, சோமனூர் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பூபதி ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் யாரும் பங்கேற்கவில்லை. அதனால், எந்த முடிவும் எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஆக., 7ம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல், 23 ம்தேதி திருப்பூரில் நடந்த கூட்டத்திலும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.
வருத்தம்
இந்நிலையில், மீண்டும் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. கடந்த, 7ம்தேதி கோவையில் மீண்டும் அதிகாரிகள் தலைமையில் கூட்டம் நடந்தது.
விசைத்தறி சங்க நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர். வழக்கம்போல் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்கவில்லை. இதனால், விசைத்தறியாளர்கள் விரக்தி அடைந்தனர். அடுத்த கூட்டம் குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும், என, அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து விசைத்தறி சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
விசைத்தறியாளர்களின் நெருக்கடிகளை புரிந்து கொள்ளாமல் ஜவுளி உற்பத்தியாளர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தையை புறக்கணித்து வருவது வருத்தம் அளிக்கிறது.
அடுத்த கூட்டத்திலாவது பங்கேற்று, புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் உடன்பாடு ஏற்பட ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாவட்ட நிர்வாகமும் இதில் தீவிர கவனம் செலுத்தி முடிவு காண வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

