sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிக்னல் அருகே இருக்குது பஸ் ஸ்டாப்... வாகனங்களுக்கு பிரச்னைகள் 'நான் ஸ்டாப்!'

/

சிக்னல் அருகே இருக்குது பஸ் ஸ்டாப்... வாகனங்களுக்கு பிரச்னைகள் 'நான் ஸ்டாப்!'

சிக்னல் அருகே இருக்குது பஸ் ஸ்டாப்... வாகனங்களுக்கு பிரச்னைகள் 'நான் ஸ்டாப்!'

சிக்னல் அருகே இருக்குது பஸ் ஸ்டாப்... வாகனங்களுக்கு பிரச்னைகள் 'நான் ஸ்டாப்!'


ADDED : பிப் 12, 2024 12:46 AM

Google News

ADDED : பிப் 12, 2024 12:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவையில் வாகனங்களின் எண்ணிக்கை, 25 லட்சத்துக்கும் அதிகமாகி விட்டது. தினமும், 500 வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்படுகின்றன. ஆனால், ரோடுகள் இன்னும் பழைய நிலையிலேயே உள்ளன.

குறிப்பாக, சிக்னல்களுக்கு அருகே உள்ள பஸ் ஸ்டாப்களில் நிறுத்தப்படும் பஸ்களால், மற்ற வாகனங்கள் அடையும் இன்னல்களுக்கு, அளவே இல்லை.

கணபதி பஸ் ஸ்டாண்ட், பொள்ளாச்சி மெயின் ரோடு, மதுக்கரை மார்க்கெட் ரோடு, லட்சுமிபுரம் பஸ் ஸ்டாப், சேரன் நகர், வெள்ளக்கிணறு பிரிவு, வடகோவை, சவுரிபாளையம், சிங்காநல்லுார், லாலி ரோடு சிக்னல், திருச்சி ரோடு, அவிநாசி ரோடு, ஹோப்ஸ் காலேஜ் உள்ளிட்ட நகர், புறநகர் பகுதிகளில் குறுகிய ரோடுகளிலும், சிக்னல்களுக்கு அருகே உள்ள பஸ் ஸ்டாப்களில் நிறுத்தப்படும் பஸ்களால், தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பிற வாகன ஓட்டுனர்கள் படாதபாடுபடுகின்றனர்.

குறிப்பாக, காலை நேரத்தில் அவசர கதியில், பணிக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு செல்லும் வாகனங்கள், இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி, படும் அவஸ்தைக்கு அளவே இல்லை. அந்த பஸ்களை முந்தி செல்ல முயலும் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன.

சீரான வாகன இயக்கத்துக்கு, குறுகலான பகுதிகளில் உள்ள பஸ் ஸ்டாப்களையும், சிக்னல்களுக்கு அருகே உள்ள பஸ் ஸ்டாப்களையும், சற்று தள்ளி அமைக்க வேண்டும். அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.

மாநகராட்சியும், மாநகர போக்குவரத்து காவல்துறையும் கைகோர்த்து, தாமதிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us