sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆண்டுக்கு ரூ. 11 கோடி வரி வசூலிக்கும் கீரணத்தம் ஊராட்சி இணைப்பதால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய்

/

ஆண்டுக்கு ரூ. 11 கோடி வரி வசூலிக்கும் கீரணத்தம் ஊராட்சி இணைப்பதால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய்

ஆண்டுக்கு ரூ. 11 கோடி வரி வசூலிக்கும் கீரணத்தம் ஊராட்சி இணைப்பதால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய்

ஆண்டுக்கு ரூ. 11 கோடி வரி வசூலிக்கும் கீரணத்தம் ஊராட்சி இணைப்பதால் மாநகராட்சிக்கு கூடுதல் வருவாய்


ADDED : ஜன 02, 2025 10:33 PM

Google News

ADDED : ஜன 02, 2025 10:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; கோவை மாநகராட்சியுடன் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தைச் சேர்ந்த கீரணத்தம் ஊராட்சியை இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கீரணத்தம் ஊராட்சி கோவை மாவட்டத்தில் உள்ள 228 ஊராட்சிகளிலேயே அதிக வருவாய் உள்ள ஊராட்சி ஆகும். இங்கு தனியார் சாப்ட்வேர் பார்க்குகள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டு வருகிறது. 20 ஆயிரம் கணினி பொறியாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர். கீரணத்தம் ஊராட்சியில் கீரணத்தம், எம்.ஜி.ஆர்., நகர், புதுப்பாளையம், சாம்பிராணி குட்டை ஆகிய பகுதிகள் உள்ளன.

இங்கு ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது. கட்டமைப்பு வசதிகள் செய்த பிறகு சில ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட 45 கோடி ரூபாய் வங்கியில் இருப்பு வைக்கப்பட்டு அதனுடைய வட்டி வருவாய் மூலம் வளர்ச்சிப் பணிகள் செய்யப்படுகிறது.

வழக்கமாக கிராம ஊராட்சிகளில் சராசரி வரி வருவாய் ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும். ஆனால் இங்கு 11 கோடி ரூபாய் வரி வருவாய் உள்ளதால் கோவை மாநகராட்சி உடன் இணைப்பதால் மாநகராட்சிக்கு அதிக வருமானம் கிடைக்க உள்ளது.

மேலும் ஊராட்சி கணக்கில் தற்போது உள்ள 45 கோடி ரூபாய் மாநகராட்சி வளர்ச்சி பணி செய்ய உதவும். மாநகராட்சி உடன் இணைவதால் இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம், பாதாள சாக்கடை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் ஏற்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us