sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

வாலிபரை காப்பாற்ற முயன்றவர் விஷவாயு தாக்கியதில் பலி

/

வாலிபரை காப்பாற்ற முயன்றவர் விஷவாயு தாக்கியதில் பலி

வாலிபரை காப்பாற்ற முயன்றவர் விஷவாயு தாக்கியதில் பலி

வாலிபரை காப்பாற்ற முயன்றவர் விஷவாயு தாக்கியதில் பலி


ADDED : பிப் 01, 2024 01:55 AM

Google News

ADDED : பிப் 01, 2024 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியை சேர்ந்தவர் சரவணன், 45, கோவை சரவணம்பட்டியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் பிளம்பராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் அவர், பீளமேடு தண்ணீர் பந்தல் ரோட்டில், கவுதமபுரி நகர் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு குடிநீர் குழாய்களின் வால்வு திறப்பதற்காக கட்டப்பட்டிருந்த 10 அடி ஆழ தொட்டியில் ஒருவர் மயங்கி கிடப்பதை சரவணன் பார்த்தார். உடனடியாக அந்த தொட்டியில் இறங்கி, மயங்கி கிடந்தவரை காப்பாற்ற முயன்றார். அப்போது, திடீரென விஷவாயு தாக்கி அவர் மயங்கினார்.

அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், பீளமேடு போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கணபதி தீயணைப்பு துறையினர், உள்ளே இறங்கி இருவரையும் மேலே துாக்கி வந்தனர்.

பின், கோவை அரசு மருத்துவமனையில் இருவரையும் அனுமதித்தனர். அங்கு சரவணனை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்றொருவரான அஜய்குமார், 19, என்பவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us