/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு
/
இளநீர் பண்ணை விலை இரண்டு ரூபாய் உயர்வு
ADDED : மார் 17, 2026 05:57 AM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலை கடந்த வாரத்தை விட, 2 ரூபாய் உயர்ந்துள்ளது.
ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது:
இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீரின் விலை கடந்த வாரத்தை விட, 2 ரூபாய் உயர்த்தப்பட்டு, 41 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு டன் இளநீரின் விலை, 17 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் இளநீரின் தேவை அதிகரித்துள்ளது.
தேவைக்கேற்ப இளநீர் வரத்து இல்லாததால், இளநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், விலையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது. எனவே, இளநீரை குறைந்த விலைக்கு விற்க வேண்டாம்.
இவ்வாறு, கூறினார்.

