sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சியில் 8 ஆண்டு பிரச்னைக்கு வந்தது தீர்வு

/

மாநகராட்சியில் 8 ஆண்டு பிரச்னைக்கு வந்தது தீர்வு

மாநகராட்சியில் 8 ஆண்டு பிரச்னைக்கு வந்தது தீர்வு

மாநகராட்சியில் 8 ஆண்டு பிரச்னைக்கு வந்தது தீர்வு


ADDED : நவ 12, 2024 05:44 AM

Google News

ADDED : நவ 12, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை ; கோவை சாயிபாபா காலனியை சேர்ந்த, 66 வயதான நடராஜன் என்பவர், ஆக., மாதம் மாநகராட்சி அலுவலகத்தில், மேயர் ரங்கநாயகி தலைமையில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில், மனு கொடுத்தார்.

அம்மனுவில், '44வது வார்டு சாயிபாபா காலனி, கே.கே.புதுார், ராமலிங்க நகர் நான்காவது தெருவில், 'மருதம் பாக்கியா அடுக்குமாடி குடியிருப்பு'க்கு எதிர் சாலையில், 500 மீட்டர் துாரத்துக்கு ரோடு குண்டும் குழியுமாக இருக்கிறது. புதிதாக ரோடு போட்டுக் கொடுங்கள்.

தயவு செய்து பதில் மட்டும் கொடுக்காதீங்க; ரோடு போட்டுக் கொடுங்கள்' என, மன்றாடி கோரிக்கை விடுத்தார்.

பொறியியல் பிரிவு அதிகாரிகள் அம்மனுவை பரிசீலித்து, 'அடுத்த நிதியாண்டில், நிதி ஒதுக்கி, ரோடு போட்டுத் தரப்படும்' என, கூறியிருக்கின்றனர்.

மொத்தம், 500 மீட்டர் துாரத்துக்கு ரோடு போடுவதற்கு, எட்டு வருடங்களாக போராடி வரும் நடராஜன், நேற்றைய தினம் சரவணம்பட்டியில் நடந்த 'மக்களைத்தேடி மாநகராட்சி' முகாமிற்கு நேரில் சென்றார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனை நேரில் சந்தித்து, மீண்டும் முறையிட்டார்.

தமிழக அரசு ஒதுக்க உள்ள சிறப்பு நிதி ரூ.200 கோடி திட்டத்தில், அவ்வீதியை சேர்க்க உத்தரவிட்ட கமிஷனர், தற்காலிகமாக அப்பகுதியில் 'பேட்ச் ஒர்க்' செய்ய, பொறியியல் பிரிவினருக்கு அறிவுறுத்தினார். அப்பணி நடக்கிறதா என்பதை நேற்றிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, கமிஷனரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.






      Dinamalar
      Follow us