/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு சுவர்கள் முழுக்க விளம்பரம்; அரசியல் கட்சிகளால் அலங்கோலம்
/
அரசு சுவர்கள் முழுக்க விளம்பரம்; அரசியல் கட்சிகளால் அலங்கோலம்
அரசு சுவர்கள் முழுக்க விளம்பரம்; அரசியல் கட்சிகளால் அலங்கோலம்
அரசு சுவர்கள் முழுக்க விளம்பரம்; அரசியல் கட்சிகளால் அலங்கோலம்
ADDED : பிப் 19, 2025 09:25 PM

வால்பாறை ; அரசு சுவர்களில்,கட்சியினர் போட்டி போட்டுக் கொண்டு, விளம்பரம் செய்வதால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
வால்பாறை - பொள்ளாச்சி ரோட்டில், தி.மு.க.,வினர் கட்சி விளம்பரங்களை எழுதியுள்ளனர். குறிப்பாக, ஆழியாறில் இருந்து வால்பாறை நகர் வரும் வழியில் ரோட்டின் தடுப்புச்சுவர்களில் விளம்பரம் எழுதி அலங்கோலப்படுத்தியுள்ளனர்.
இதே போல், வால்பாறை நகரில் அ.தி.மு.க.,வினர், பயணியர் நிழற்கூரைகளில் விதிமுறையை மீறி, போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தி.மு.க., அ.தி.மு.க., ஆகிய இரு கட்சியினர், போட்டி போட்டுக்கொண்டு, அரசு சுவர்களில் விளம்பரம் செய்வதால், பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட தடுப்புச்சுவர்கள் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
விதிமுறை மீறி எழுதப்பட்டுள்ள விளம்பரங்களாலும், ஒட்டப்படும் போஸ்டர்களாலும், வாகன ஓட்டுநர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
வால்பாறையில், அரசு சுவர்களில் விதிமுறை மீறி ஒட்டப்பட்டுள்ள, போஸ்டர்கள், சுவர் விளம்பரங்களை உடனடியாக அப்புறப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். விளம்பர போஸ்டர்களை அகற்றி, வெள்ளை வர்ணம் பூசுவதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.