/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
/
மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
ADDED : ஜன 22, 2025 11:20 PM

அன்னுார், ; திம்மநாயக்கன்புதூர், மகா பைரவர் கோவிலில், நேற்று முன்தினம் தேய்பிறை அஷ்டமி விழா நடந்தது.
அன்னுாரில் இருந்து மொண்டிபாளையம் செல்லும் வழியில், திம்மநாயக்கன்புதூரில் மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. இங்கு பைரவருக்கு என்று தனி கோவில் உள்ளதால், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. இதையடுத்து, பைரவருக்கு, பல்வேறு திரவியங்களால் அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. அன்னுார் கானுார் மற்றும் மொண்டி பாளையம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

