/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
/
மகா பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி விழா
ADDED : ஏப் 19, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர: அன்னூரில் இருந்து மொண்டிபாளையம் செல்லும் வழியில், திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமியன்று, சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இங்கு பைரவருக்கென தனி கோவில் உள்ளதால், பல ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுகின்றனர். இன்று இரவு 7:00 மணிக்கு, சிறப்பு வேள்வி பூஜை நடக்கிறது.
பைரவருக்கு பல்வேறு திரவியங்களால், அபிஷேக பூஜையும், அலங்கார பூஜையும் நடைபெறுகிறது. தீபாராதனை காண்பிக்கப்படுகிறது பக்தர்கள் பங்கேற்று, இறையருள் பெற விழா கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

