sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாயிகள் அடையாள எண் பெற இன்னும் 10 நாள் தான் இருக்கு

/

விவசாயிகள் அடையாள எண் பெற இன்னும் 10 நாள் தான் இருக்கு

விவசாயிகள் அடையாள எண் பெற இன்னும் 10 நாள் தான் இருக்கு

விவசாயிகள் அடையாள எண் பெற இன்னும் 10 நாள் தான் இருக்கு


ADDED : மார் 20, 2025 11:39 PM

Google News

ADDED : மார் 20, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்:தனித்துவ அடையாள எண்ணை, வரும் 31ம் தேதிக்குள் விவசாயிகள் பெற்றுக்கொள்ள வேண்டும், என, வேளாண் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளின் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த அனைத்து திட்டங்களின் பயன்களை எளிமையாகவும், விரைவாகவும் விவசாயிகள் பெற, அவர்களின் நிலம் குறித்த விபரங்கள் சேகரித்து, தனித்துவ அடையாள எண் வழங்கும் பணி, சூலுார் மற்றும் சுல்தான் பேட்டையில், நடந்து வருகிறது. மொத்தம், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இன்னும் பலர் பதிவு செய்யவில்லை.

இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறியதாவது:

விவசாயிகளுக்கு தனித்துவ அடையாள எண் வழங்க, தரவுகள் பதிவேற்றம் செய்யும் பணி நடக்கிறது. ஆதார் எண், பட்டா விபரம், ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் ஆகியவற்றுடன் சென்று அந்தந்த ஊர்களில் நடக்கும் முகாமில் பதிவு செய்து கொள்ளலாம். அருகில் உள்ள அரசு பொது இ.சேவை மையத்திலும் கட்டணமின்றி பதிவு செய்து கொள்ளலாம்.

வரும், 31ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதற்குள், இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் பதிவு செய்து பயன் பெறலாம். அடையாள எண் இருந்தால் தான், அரசின் அனைத்து சலுகைகளையும் பெற முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us