/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கல்யாணி' நிறைய நடக்க வேண்டும்
/
'கல்யாணி' நிறைய நடக்க வேண்டும்
ADDED : அக் 02, 2025 12:53 AM

தொண்டாமுத்துார்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமானது கல்யாணி யானை, 33 வயது. இந்த யானையை கோவில் நிர்வாகம் பராமரித்து வருகிறது.
இதன் உடல் நலனை, வனத்துறையினர் மூன்று மாதத்துக்கு ஒரு முறை ஆய்வு செய்வது வழக்கம். உதவி வனப்பாதுகாவலர் விஜயகுமார் தலைமையிலான குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர்.
கல்யாணி யானை, 4.6 டன் எடையுள்ளது. நல்ல உடல் நலமுடன் இருக்கிறது. நடைப்பயிற்சி அளிக்கும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும் என, அறநிலையத்துறை அதிகாரிகளிடம் அக்குழுவினர் அறிவுறுத்தினர்.
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உதவி கமிஷனர் (பொ) விமலா, பேரூர் கால்நடை உதவி டாக்டர் சாந்தி, கோவை வனச்சரகர் திருமுருகன், வனக்கால்நடை டாக்டர் வெண்ணிலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.