/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு நாட்களுக்கு குடிநீர் வராது
/
இரு நாட்களுக்கு குடிநீர் வராது
ADDED : நவ 08, 2025 01:03 AM
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு பில்லுார் குடிநீர் திட்டத்தில், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து, குடிநீர் எடுத்து வினியோகிக்கப்படுகிறது. பில்லுார் அணையின் மேற்புறப் பகுதியில் குந்தா அணையில், மின் பராமரிப்பு பணி நடக்கிறது.
அதனால், இன்று (சனிக்கிழமை) காலை 9 முதல் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும் என, மின்வாரியம் தெரிவித்துள்ளது.
எனவே, பில்லுார் இரண்டாவது மற்றும் மூன்றாவது திட்டங்கள், கவுண்டம்பாளையம் - வடவள்ளி - வீரகேரளம் ஆகிய திட்டங்களுக்கு, தேவையான குடிநீர் பம்ப் செய்ய முடியாது.
இத்திட்டங்களால் பயன்படும் இடங்களுக்கு, குடிநீர் வினியோகம் இருக்காது. மற்ற ஆதாரங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீரை, பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டு மென, மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

