/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை பட்டு நுாற்பாளருக்கு மூன்றாம் பரிசு
/
கோவை பட்டு நுாற்பாளருக்கு மூன்றாம் பரிசு
ADDED : மார் 29, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவையை சேர்ந்த பட்டு நுாற்பாளருக்கு, மாநில அளவில் சிறந்த நுாற்பாளருக்கான மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது.
மாநில அளவில் சிறந்து விளங்கும், சிறந்த பட்டு நுாற்பாளர்களுக்கு பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில், பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு, மாநில அளவில் சிறந்த பல முனை பட்டு நுாற்பாளர்களின் வரிசையில், மூன்றாம் பரிசினை கோவை மாவட்டத்தை சேர்ந்த ரொசாரியோ லாசர் பெற்றுள்ளார்.
தலைமை செயலகத்தில் நடந்த விழாவில், முதல்வர் ஸ்டாலின், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.