sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சோற்றுத்துறைநாதர் கோவிலில் வரும் 30ல் திருக்குட நன்னீராட்டு

/

சோற்றுத்துறைநாதர் கோவிலில் வரும் 30ல் திருக்குட நன்னீராட்டு

சோற்றுத்துறைநாதர் கோவிலில் வரும் 30ல் திருக்குட நன்னீராட்டு

சோற்றுத்துறைநாதர் கோவிலில் வரும் 30ல் திருக்குட நன்னீராட்டு


ADDED : ஏப் 21, 2025 04:55 AM

Google News

ADDED : ஏப் 21, 2025 04:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் சோற்றுத்துறைநாதர் கோவிலில் வரும் 30ம் தேதி திருக்குட நன்னீராட்டு விழா நடக்கிறது.

கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகரில் அன்னபூரணி அம்மை உடனமர் சோற்றுத்துறைநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகிலுள்ள கல்லாங்காட்டுப்புதுார், சிங்கராம்பாளையம், லட்சுமிநகர், கொண்டம்பட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து ஏராளமான மக்கள் வருகை தருவர்.

கோவிலில்,திருக்குட நன்னீராட்டு விழா நிகழ்ச்சிகள், 28ம் தேதி துவங்குகிறது. அன்று, காலை, 5:00 மணிக்கு, திருவிளக்கு வழிபாடு, புனித நீர் வழிபாடு, விநாயகர், நிலத்தேவர் வழிபாடு நடக்கிறது. இரவு 7:30 மணிக்கு, வேள்வி நிறைவு, திருமுறை விண்ணப்பம், பேரொளி வழிபாடு நடக்கிறது.

வரும், 29ம் தேதி, காலை ஐங்கரன் வேள்வி வழிபாடு, மண்ணெடுத்தல், முளையிடுதல், காப்பணிவித்தல் நடக்கிறது. மாலையில், முதற்கால வேள்வி நடக்கிறது. 30ம் தேதி, அதிகாலை 4:30 மணிக்கு, திருப்பள்ளியெழுச்சி, சுற்று பூஜைகள் நடக்கிறது. காலை 7:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி, 9:00 மணிக்கு திருக்கலசப் புறப்பாடு, 9:30 மணிக்கு விமானம் மற்றும் மூலமூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு நடக்கிறது. மதியம் 12:00 மணிக்கு, அன்னதானம் நடக்கிறது. மாலையில், சுவாமி திருக்கல்யாணம் உற்சவம், இரவு சுவாமி திருவீதி உலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us