sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இது புலிநகமாக்கும்... வலைதளத்தில் தம்பட்டம் அடித்தவர் கைது

/

இது புலிநகமாக்கும்... வலைதளத்தில் தம்பட்டம் அடித்தவர் கைது

இது புலிநகமாக்கும்... வலைதளத்தில் தம்பட்டம் அடித்தவர் கைது

இது புலிநகமாக்கும்... வலைதளத்தில் தம்பட்டம் அடித்தவர் கைது


ADDED : ஜன 20, 2025 07:29 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : புலி நகத்துடன் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட கோவையைச் சேர்ந்த நபரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவர் சமூக வலை தளத்தில் வெளியான வீடியோ ஒன்றில், தான் அணிந்திருப்பது புலி நகம் எனவும், ஆந்திராவில் இருந்து வாங்கியதாகவும் பேசியிருந்தார்.

இதையடுத்து, வனத்துறையினர் அவரது வீட்டில் சோதனை செய்தபோது, மான் கொம்புகள் இருந்தது தெரியவந்தது. சோதனையின்போது, அந்நபர் வீட்டில் இல்லாத நிலையில், நேற்று வனத்துறை முன் ஆஜரானார்.

அவரிடம் இருந்து புலி நகம் பதித்த சங்கிலி பெறப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.

அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகம், நீதிமன்றம் வாயிலாக, சென்னை வண்டலூரில் உள்ள உயர்நிலை வன உயிரின பாதுகாப்பு நிறுவனத்துக்கு (ஏ.ஐ.டபிள்யூ.சி.,) பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

அங்கிருந்து பெறப்படும் அறிக்கையைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us