sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

100 சதவிகித வருகை மாணவர்களுக்கு 'டூர்'

/

100 சதவிகித வருகை மாணவர்களுக்கு 'டூர்'

100 சதவிகித வருகை மாணவர்களுக்கு 'டூர்'

100 சதவிகித வருகை மாணவர்களுக்கு 'டூர்'


ADDED : ஜன 23, 2025 11:24 PM

Google News

ADDED : ஜன 23, 2025 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், 100 சதவிகிதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு 'பேட்ஜ்' வழங்கப்பட்டது.

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில், புரோபெல் என்ற தனியார் நிறுவனம் சார்பில், 100 சதவிகித வருகை புரிந்த 28 மாணவர்களுக்கு 'பேட்ஜ்' வழங்கப்பட்டது.

மேலும், அதிக வருகை சதவிகிதம் கொண்ட முதல் மூன்று இடம் பிடித்த 6 ஏ, 8 பி, 10 டி மற்றும் 11 ஏ ஆகிய வகுப்புகளுக்கு, தனியார் நிறுவன சி.எஸ்.ஆர்., மேலாளர் கோவிந்த் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் தேன்மொழி ஆகியோர் கேடயம் வழங்கினர்.

தொடர்ந்து, பேட்ஜ் மற்றும் கேடயம் பெற்ற மாணவர்கள் அனைவரையும், நிறுவனம் சார்பில், ஒரு நாள் சுற்றுலா அழைத்து செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது.

சி.எஸ்.ஆர்., மேலாளர் கூறுகையில், ''பள்ளி மாணவர்கள், கல்வி இடை நின்றலை தவிர்க்கவும், கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவும், ஒரு நாள் சுற்றுலா மற்றும் பரிசுகள் வழங்குகிறோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us